தஞ்சையில் பிறந்த குழந்தை கடத்தல்  போலீஸ் படை மடக்கி பிடித்தது

by Editor / 09-10-2021 04:34:29pm
தஞ்சையில் பிறந்த குழந்தை கடத்தல்  போலீஸ் படை மடக்கி பிடித்தது

 

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து, நான்கு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன், 24; டைல்ஸ் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 22. கடந்த 5ம் தேதி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த வார்டில் அறிமுகம் ஆன பெண் ஒருவர், மூன்று நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவியாக இருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை  காலை ராஜலட்சுமி குளிப்பதற்காக, குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். குளித்து வந்து பார்த்தபோது, குழந்தையையும், அப்பெண்ணையும் காணவில்லை. தஞ்சை மேற்கு போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் கட்டை பையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. பைக்குள் குழந்தையை வைத்து கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பெண்ணை தனிப்படை அமைத்து, தேடி வருகின்றனர்.இந்த நிலையில் விஜி என்ற அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via