சபரிமலை மகரவிளக்கு தரிசனம் இன்று
மகரவிளக்குக்கு தரிசனத்திற்கு சபரிமலை தயாராகிவிட்டது. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சன்னிதானத்தில், மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் மகரவிளக்கு வழிபட்ட பின் மலை இறங்குவார்கள். சனிக்கிழமை பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரங்கள் அணிவித்து தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். மாலை 5.30 மணிக்கு சரம்குத்தியில் திருவாபரண ஊர்வலம் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்லப்படும். இரவு 8.45 மணிக்கு தீபாராதனை, மகரவிளக்கு பூஜை நடைபெறும். நெய் அபிஷேகமும், திருவாபரங்கள் அணிந்து விக்ரக தரிசனமும் நடைபெறும்.
Tags :