கணவர் கண் முன்னே மனைவி பரிதாப பலி

by Staff / 16-01-2023 04:07:15pm
 கணவர் கண் முன்னே மனைவி பரிதாப பலி

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி மனைவி முத்துலட்சுமி (28), இவர் தனது கணவருடன் பைக்கில் ஆறுமுகநேரி அருகே பேயன்விளை ரோட்டில் சென்றபோது எதிரே வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேேயே பரிதாமாக உயிரிழந்தார். தங்கப்பாண்டி சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.  இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாலகுமார் வழக்குப் பதிந்து, ஆறுமுகநேரி கணியான்  நகரை சேர்ந்த குருசாமி மகன் மாரியப்பன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via