கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags :