மாட்டுவண்டி போட்டி சீறி பாய்ந்த காளைகள்

by Staff / 17-01-2023 04:18:17pm
மாட்டுவண்டி போட்டி சீறி பாய்ந்த காளைகள்

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி கிராமத்தில் வ உ சி நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தய போட்டிகள் நடைபெற்றது.இதில் பெரிய மாடு சின்ன மாடு பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த போட்டியில் மதுரை நெல்லை விருதுநகர் தேனி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.இதில் பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு எல்கை 10 மைல் தூரம் நடைபெற்றது. 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் மதுரை அவனியாபுரம் மோகன் சாமி மாடு முதலிடத்தை பிடித்தது.அடுத்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 16க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்ட எட்டு மேல் எல்கை தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் வள்ளியூரை சேர்ந்த ஆனந்த தேவர் என்பவரது மாடு முதலிடத்தை பிடித்தது.பின்னர் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 32 மாடுகள் கலந்து கொண்டன இதில் எல்கை 5 மைல் தூரம் போட்டி நடத்தப்பட்டது இதில் ஜக்கம்மாள்புரம் அஜித் குமார் என்பவரது மாடு முதலிடத்தை பிடித்தது வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை பரிசாக ரொக்கத்தொகை வழங்கப்பட்டது.இந்த போட்டிகளை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

 

Tags :

Share via