இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது.

by Editor / 24-01-2023 10:07:36pm
இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் தனியார் உணவு விடுதியில் கடந்த 29.12.2022 அன்று அத்துமீறி நுழைந்து  விடுதி உரிமையாளரான பாலகுமரேசன் (45) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில் ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியைச் சேர்ந்த  பிரதீப் (எ) அந்தோணிபிரதீப் (20) ,அலெக்ஸ் ரூபன் (எ) பப்பை (19) மற்றும் சிலரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான 1)பிரதீப் (எ) அந்தோணி பிரதீப் 2) அலெக்ஸ் ரூபன் (எ) பப்பை ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர்  செந்திலும் 

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (50) என்பவரை முன்விரோதம் காரணமாக கடந்த 25.12.2022 அன்று அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த  முத்துக்குமார் (எ) மதுரைமுத்து (32) என்பவரை குரும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்கின் எதிரியான முத்துக்குமார் (எ) மதுரைமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குரும்பூர்  காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் 

 எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் வைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணிபுரியும் விளாத்திகுளம் பூசனூரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அய்யப்பசாமி (42) என்பவரை கடந்த 18.11.2022 அன்று கத்தியை காட்டி மிரட்டி கடையிலிருந்த ரூபாய் 1இலட்சத்து 50 ஆயிரத்தி 470 ரூபாய் பணம்,மற்றும்  40 மதுபாட்டில்கள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தூத்துக்குடி சிலுவைபட்டி துரைசிங் நகரைச் சேர்ந்தவிக்ரம் (எ) விக்கி (22) மற்றும் சிலுவைப்பட்டி ஆனந்த் (எ) அசோக் (29) ஆகியோரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான விக்ரம் (எ) விக்கி மற்றும் ஆனந்த் (எ) அசோக் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமதும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 5 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 
அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 5 நபர்களை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via