யாருக்கும் ஆதரவு இல்லை சரத்குமார்

by Staff / 25-01-2023 03:54:47pm
யாருக்கும் ஆதரவு இல்லை  சரத்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் தாம் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை என அவர்குறிப்பிட்டுள்ளார். உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்தபின் எடுத்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், எந்த கட்சிக்கும், யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via