பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

by Staff / 20-05-2022 11:54:53am
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இந்தோனேசிய அதிபர் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 23ஆம் தேதி முதல் விளக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. உலக அளவில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசிய அரசின் இந்த முடிவை கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை விலக்க பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு எம்பிக்களும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து தற்போது தடை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via