நேபாளத்தில் பெய்த மழைக்கு 101 பேர் உயிரிழப்பு

by Editor / 22-10-2021 07:56:33pm
நேபாளத்தில் பெய்த மழைக்கு 101 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 101 அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளார்கள் என்று அந்நாட்டின் உள் விவகாரம் தொடர்பான அரசுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


நேபாளத்தில் பருவ மழையின் காரணமாக மிகவும் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட இயற்கை பேரிடரின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் சுமார் 101 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.அதோடு மட்டுமின்றி நேபாளத்தில் மிகவும் கடுமையாக பெய்த பருவ மழையினால் பல முக்கிய பகுதிகளும் சேதமடைந்துள்ளது. இந்த தகவலை நேபாள நாட்டின் உள் விவகாரம் தொடர்பாக அரசுத் துறை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via