நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

by Staff / 22-02-2024 04:48:50pm
நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

புதுச்சேரி மாநிலம் முத்திரைப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் தமிழரசன் என்ற பட்டாணி தமிழ் (வயது 34). இவர் கடந்த 29. 10. 2023 அன்று கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொந்தமூர் சுடுகாடு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் வெடிமருந்துகள் பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதால் அவரை கிளியனூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த தால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி. பழனி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கிளியனூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via