நெல்லை விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

by Editor / 26-07-2021 09:14:08pm
  நெல்லை விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

மேகதாதுவில் அணை அணை கட்டுவதை தடுக்க வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

  கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிப்பது உடனடியாக மத்திய அரசு தடுக்க வேண்டும், அதே போன்று தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையை அகற்றவேண்டும், விவசாயிகளுக்கு தற்போது ஏற்படும் உரதட்டுப்பாட்டை நீக்க உடனடியாக மாவட்ட நிர்வாகங்கள்    நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவினை நேரில் அளித்தனர்

 

Tags :

Share via