பட்டியல் இளைஞரை 4 பேர் அடித்துக் கொலை

by Staff / 28-01-2023 11:35:47am
பட்டியல் இளைஞரை 4 பேர் அடித்துக் கொலை

ஹரியானா குருகிராமில் பட்டியலின இளைஞரை 4 பேர் அடித்துக் கொன்றன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணம் கட்ட செலுத்துவதற்காக கொடுத்த ரூ.3 ஆயிரத்தை திருப்பி தராததால் மளிகை கடை உரிமையாளரான இந்தர் குமார்(33) என்பவரை அந்த கும்பல் அடித்து உதைத்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகர் யாதவ் என்பவர் மின்கட்டணம் செலுத்த இந்தர்குமாரிடம் ரூ.19000 கொடுத்துள்ளார். ஆனால், இதிலிருந்து ரூ.3000 எடுத்து செலவழித்த இந்தர் குமாரால் மின்கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அப்போது ஏற்பட்ட தகராறு அடிதடியாகவும், பின்னர் கொலையில் முடிந்துள்ளது.

 

Tags :

Share via