மகளை கொடூரமாக கொன்ற தந்தை

by Staff / 28-01-2023 11:38:49am
மகளை கொடூரமாக கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டம் பிம்பி மஹிபால் கிராமத்தைச் சேர்ந்த சுபாங்கி (22) என்ற இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதனால், அவரது குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். சுபாங்கி மணமகனை அழைத்து தனது காதலை பற்றி சொல்லி திருமணத்தை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை, சகோதரர் சேர்ந்து கடந்த 22ஆம் தேதி சுபாங்கியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தில் கயிறு கட்டி கொன்றனர். பின்னர், உடலை தீ வைத்து எரித்து, கால்வாயில் கரைத்துள்ளனர்.

 

Tags :

Share via