ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை

by Staff / 28-01-2023 12:50:36pm
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை

இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரு அணிகளும் சின்னத்தைப் பெற போட்டி போட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via