வைகை அணையில் இருந்து 7574 கன அடி தண்ணீர் தற்போது வெளியேற்றம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 கன அடி ஆகும்.
தற்போது நிலவரப்படி வைகை அணையின் 70 அடியை எட்டிய நிலையில் வைகை அணைக்கு வரும் உபரி நீர் 7574 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால் வைகை கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் கரையை கடக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதே போன்று வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் தரைப்பாலம் தண்ணீர் மூழ்கி செல்வதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags :