தமிழகத்திற்கு அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம்

by Staff / 04-01-2024 05:23:06pm
தமிழகத்திற்கு அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023ல் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது. அதனை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார். தமிழகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37,965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11,116 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம் என அவர் பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்டி வரியாக 36,350 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 37, 370 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via