மாநாடு தமிழில் நடப்பது மகிழ்ச்சி முதல்வர் ஸ்டாலின்

by Staff / 29-01-2023 03:17:22pm
மாநாடு தமிழில் நடப்பது மகிழ்ச்சி  முதல்வர் ஸ்டாலின்

காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இ.என்.டி கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்பின் பேசிய ஸ்டாலின், மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவத்துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது என கூறினார்.
 

 

Tags :

Share via