செந்நிறமாக மாறிய உப்பாற்று ஓடையை கனிமொழி எம்பி ஆய்வு

by Staff / 29-01-2023 04:36:03pm
செந்நிறமாக மாறிய உப்பாற்று ஓடையை கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி அருகே கோமஸ்புரம் பகுதியில் மீன் பதநிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக ரத்த ஆறு ஓடுவது போல் மாறிய உப்பாற்று ஓடையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதிதூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூர்ணி பஞ்சாயத்துக்குட்பட்ட கோமஸ் புரம் பகுதியில் சுமார் 6க்கும் மேற்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலைகள் உப்பாற்று ஓடை கரை அருகில் அமைந்துள்ளன,
இந்த மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் மீன்களை கழுவ மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் விட்டு விடுகின்றனர்.இதன் காரணமாக உப்பாற்று ஓடையில் உள்ள நீர் முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக மாறி ரத்த ஆறு ஓடுவது போல் காட்சியளிக்கிறது.இதன் காரணமாக அந்த சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அருகே உள்ள உப்பளங்களில் இந்த கெமிக்கல் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் ஓடையில் செந்நிறமாகிய மாறிய கழிவுநீர் கடல்வாழ் உயிரினங்களில் சொர்க்க பூமியாக கதறப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.இந்த நிலையில் செந்நிறமாக மாறிய உப்பாற்று ஓடையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர்.அப்போது உப்பாற்று ஓடை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு
மீன் பதனிடும் தொழிற்சாலையில் இருந்து மீன் கழுவ மற்றும் பதப்படுத்த பதப்படுத்தும் கெமிக்கலை சுத்திகரிக்கப்படாமல் உப்பாற்று ஓடையில் விடும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via