வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை

by Staff / 29-01-2023 04:38:14pm
 வீடு புகுந்து ரவுடி வெட்டி கொலை

தூத்துக்குடி அருகே உள்ள சங்கர் பேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது பத்து பேர் கொண்ட மர்ம கும்பல்கள் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.காவல்துறையில் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2017ம் ஆண்டு அங்குசாமி என்பவரை கொலை செய்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.தூத்துக்குடியில் குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‌

 

Tags :

Share via