தென்காசியை சேர்ந்தவர் செங்கல் பட்டு அருகே கொலை

by Editor / 19-05-2022 09:32:35am
தென்காசியை சேர்ந்தவர் செங்கல் பட்டு அருகே கொலை

செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி அடுத்த அனந்தமங்கலம்  குன்று பகுதியில் தென்காசி  பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரை ஒரத்தி பகுதியைச்  சேர்ந்த ரமேஷ் என்பவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். ரமேஷிடம் தென்காசியை சேர்ந்த பால்ராஜ் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதனை அவர்  திருப்பி தராததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென்காசியிலிருந்து ரமேஷ் பால்ராஜை காரில் கடத்தி வந்து அனந்தமங்கலம்  குன்று பகுதியில்  கொலை செய்துள்ளார். கொலை செய்து விட்டு ரமேஷ் ஒரத்தி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இருவரும் நெல் வியாபாரம் செய்து வந்துள்ளனர்என்று கூறப்படுகிறது.

 

Tags : A man from Tenkasi was killed near a brick kiln

Share via