மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது" - கனிமொழி
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது,"மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும், அரசியல் யாரையும் விடாது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் மாற்றங்கள் என அனைத்துக்கும் அரசியல் தான் காரணம். அதனால் தான் மாணவர்கள் அரசியல் பேசவேண்டும். அரசியலில் ஈடுபடவேண்டும். அரசியலை மாற்றியமைக்க கூடிய உரிமைகளை, திறமைகளை வளர்த்து கொண்டு மாணவர்கள் தெளிவு பெறவேண்டும்" என அவர் கூறினார்.
Tags :