பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டிற்குகீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டமான உஜ்வாலா திட்டத்தின் அடுத்தகட்டமாக உஜ்வாலா யோஜனா தற்போது அமலில் உள்ள 2.0 திட்டத்திற்கு 18 வயது நிரமிய இதுவரை இலவச சிலிண்டர் பெறாத பெண்கள், தங்களின் ஆதார், ரேஷன் கார்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை கொண்டு www.pmuy.gov.in-என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதன்பின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :