இந்தியர்களின் டேட்டா திருடப்பட்டுள்ளது

by Staff / 03-11-2023 11:50:14am
இந்தியர்களின் டேட்டா திருடப்பட்டுள்ளது

81 கோடி இந்தியர்களின் டேட்டா திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கோவிட் -19 பரிசோதனையின்போது இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட டேட்டாக்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக USAவின் சைபர் செக்யூரிட்டி உளவு அமைப்பான Resecurity வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 81 கோடி பேரின் டேட்டாக்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. இதுவரை வரலாற்றில் நடந்திராத ஓர் அசாதாரண விஷயம்” என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via