ராட்சத கிரேன் விழுந்து 15 பேர் பலி..மீட்புபணிகள் தீவிரம்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சாலைப் பணியின் போது ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்து 15 பேர் வரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டத்தில் ஷஹாபூர் தெசில் பகுதியில் நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை - நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலை பணியின் போது இந்த விபத்து நடந்துள்ளது. ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மேலும் 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த கொடூர விபத்து குறித்து காவல்துறையினர் மீட்ப்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : In Thane, Maharashtra, 15 people were killed when a giant crane fell during road work.