திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது

by Editor / 31-01-2023 08:57:15am
திமுக நிர்வாகி வன்கொடுமை சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வியாழக்கிழமை கோவில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியல் இனப் பிரிவை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து அநாகரிமாக மிகவும் முகம் சுளிக்கும் வார்த்தைகளால் கண்டித்து பேசியுள்ளார் .
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு சென்று பட்டியலின மக்களிடம் நடந்தவற்றை விசாரித்தனர் .

இந்த நிலையில் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கம்  கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட
அனைத்து பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சேலம் இரும்பாலை காவல்துறையினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு
சென்று ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை கைது செய்தனர்.

 

Tags :

Share via