கல்குவாரியை கண்டித்து கஞ்சி காய்ச்சி போராட்டம். 

by Editor / 31-01-2023 08:56:03pm
கல்குவாரியை கண்டித்து கஞ்சி காய்ச்சி போராட்டம். 

 நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள புத்தேரி கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்ததில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்து இருப்பதாக கூறப்ப்டுகிறது.இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் கல்குவாரியை  முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்காக கஞ்சி காய்ச்சும் பணியும் நடைபெற்று வருகிறது.பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த  போலீசார் அங்கு அசம்பாவிதங்கள் உருவாகிவிடக்கூடாது  என்பதற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்குவாரியை கண்டித்து கஞ்சி காய்ச்சி போராட்டம். 
 

Tags :

Share via