ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை

by Staff / 10-02-2023 01:35:54pm
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் கான். , செல்போன் கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பழக்கம் கொண்ட ரியாஸ் கான்., நேற்று ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் திடிரென காவிரி ஆற்றில் செல்லும் பழைய பாலத்தின் மீது இரு சக்கர வாகனத்தில் நிறுத்தி விட்டு தீடிரென பாலத்தின் மீது நின்று குதித்துள்ளார். இதையடுத்து வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via