பழனி முருகன் கோயிலில் 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா.

by Editor / 14-02-2023 01:43:21pm
பழனி முருகன் கோயிலில் 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ச்சி  நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் படி தீவிர சிகிச்சை மேற்கொண்டஅவர்  உடல் நலம் முன்னேறி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் மூலம் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகை சமந்த வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற சமந்தா, 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி கொண்டு மேலே சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற ஆனந்த விநாயகரை வணங்கினார். தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருக பெருமானை  தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த ஏராளமான ரசிகர்கள் சமந்தாவை முற்றுகையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சமந்தா, சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கபட்டதாகவும், தற்போது கடவுளின் அருளோடும்,மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும், இறைவனிடம் வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோயிலுக்கு வந்து  சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார். அவருடன் 96 என்ற திரைப்படத்தின்  இயக்குநர் சி.பிரேம்குமார் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.

 

பழனி முருகன் கோயிலில் 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா.
 

Tags :

Share via