சரக்கு ஆட்டோ மோதி பெண் பலி

by Staff / 15-02-2023 04:27:11pm
சரக்கு ஆட்டோ மோதி பெண் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான பிரேமா, இவர் கோவையில் வீட்டு வேலை செய்து வருகின்றார், இவர் நேற்று ஆர் எஸ் புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் நடந்து சென்றதாக கூறப்படுகின்றது, அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியுள்ளது, இதில் பிரேமா படுகாயம் அடைந்தார், உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் , இது குறித்து கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில், உக்கடம் வைசியால் வீதியைச் சேர்ந்த ஓட்டுநர், 57 வயதான முருகேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via