ராஜாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை எடப்பாடி பழனிசாமி

by Staff / 18-02-2023 12:26:20pm
ராஜாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை எடப்பாடி பழனிசாமி

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via