கணவன் மனைவி சடலமாக மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் வசித்து வருபவர் சகாதேவன் வயது 90, அவரது மனைவி ஜானகி வயது 82. இவர்கள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்கு வெளியே சாலை ஓரத்தில் சகாதேவன் காயங்கள் ஏதுமின்றி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது மகன் கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். கோபால் வந்து பார்த்தபோது தனது தந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது ஜானகி இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் திடீரென அருகில் இருந்த அடர்ந்த முந்திரி காட்டுக்குள் தேடி சென்று பார்த்தபோது தனது தாய் ஜானகி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் நகையும் காணாமல் போயிருந்தது. இதனைக் கண்டு அதிசியுற்ற கோபால் மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ருக்மாங்கதன் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ருக்குமாங்கதன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் மாமல்லபுரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :