தந்தைக்காக தானம் செய்த மகள்
கேரளாவில் 17 வயது பெண் ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளார். திரிசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு மாற்று கல்லீரல் பொருத்துவதே தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மகள் தேவந்ததா தற்போது தனது கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார். இதையடுத்து அவரது தந்தைக்கு கடந்த 9ம் தேதி சிகிச்சை நிறைவுப்பெற்றது.
Tags :