அதிமுகவின் 51-வது பொன்விழா 51 ஜோடிகளுக்கு திருமண விழா-உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு  தீர்ப்பு.

by Editor / 23-02-2023 08:21:31am
 அதிமுகவின் 51-வது பொன்விழா 51 ஜோடிகளுக்கு திருமண விழா-உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு  தீர்ப்பு.

மதுரை திருமங்கலம் அருகே T.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் அதிமுகவின் 51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும்., மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அம்மா பேரவை சார்பில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் மகள் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாயத் திருமண விழா நடைபெற உள்ளது.

இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும்., முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து சாலை மார்க்கமாக மதுரை வருகை தர உள்ளார். காலை 8.30 மணி அளவில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தொண்டர்கள் புடைசூல திருமணம் நடைபெறும் T.குன்னத்தூர் அம்மா கோவில் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சரியாக 9.30 மணி அளவில் சமுதவ சமுதாய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமண நிகழ்வை நடத்தி வைக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து., முன்னதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் திருவுருவா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிறகு மணமக்களை வாழ்த்திவிட்டு மீண்டும் சாலை மார்க்கமாக கப்பலூர் அருகே தனியார் தங்கும் விடுதிக்கு சென்று மத்திய 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமான மூலம் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார். இதற்கிடையில் "அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பாக உள்ளது." குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் திக்..திக்..மனநிலையில் உள்ளனர்.

 

Tags : உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு  தீர்ப்பு.

Share via