4 வயது குழந்தையுடன் ரயிலில் விழுந்த பெண்
சென்னை ஊரப்பாகத்தில் குடும்ப தகராறு காரணமாக அரசு ஊழியராக இருக்கும் பிரேமலதா என்பவர் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். தண்டவாளத்தில் அப்பெண் வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர், உடனே ரயிலை நிறுத்தினார். எனினும், மிதமான வேகத்தில் ரயில் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அங்கு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் இருவரையும் அதே ரயிலில் ஏற்றிய ஓட்டுநர், தாம்பரம் கொண்டு வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Tags :