89 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

by Staff / 26-02-2023 05:18:41pm
89 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் 
விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் ஆலை நிர்வாகமே கட்ட வேண்டும், விவசாயிகளை சிவில் பிரச்சனையிலிருந்து விடுவிக்க வேண்டும். சர்க்கரை ஆலை  விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர் கடன் முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும்,. மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு  வழங்க வேண்டும்,. வெட்டு கூலி வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலை தொடர்பான எந்த விதமான பேச்சுவார்த்தையும் விவசாயிகள் முன்னிலையில் வெளிப்படையாக மட்டுமே நடைபெற வேண்டும்.  உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி89 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.காற்று, புயல், மழை, பணி கடும் குளிர் என பாராமல் அங்கேயே உணவு சமைத்து உண்டு
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via