இளம் பெண் மீது தாக்குதல்

by Staff / 09-03-2023 05:43:33pm
 இளம் பெண் மீது தாக்குதல்

கோவை பீளமேடு புதுரை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார் இதுகுறித்து கீர்த்தனா கொடுத்த புகாரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இதில் இளம் பெண்ணை தாக்கியது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(44) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

 

Tags :

Share via