பாலியல் தொல்லை பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.

by Editor / 11-03-2023 08:56:51am
பாலியல் தொல்லை பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியை அவரது உறவினரான புள்ளமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன் வயது 19 என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் மாணவி பள்ளிக்குச் செல்லும்போது மாணவியை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டுக்குள் புகுந்த முகிலன் மாணவியிடம் முத்தம் கேட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார்.மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட  அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்ப்பதற்குள் அங்கிருந்து முகிலன் தப்பி ஓடி விட்டான். 

இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இது குறித்து முகிலன் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர் அப்போது முகிலனின் பெற்றோருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளர். அதனைத் தொடர்ந்து வடபாதிமங்கலம் காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் முகிலன் மீது போட்டோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via