வால்பாறையில்  சாலையோர  கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

by Editor / 08-02-2023 03:11:40pm
வால்பாறையில்  சாலையோர  கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோவை மாவட்டம் வால்பாறை டவுண் பகுதியில் போக்குவரத்திற்கும்,பொது மக்களுக்கும் இடையூறாக சாலையை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் கடைகள் கட்டிடங்கள் காட்டியுள்ளனர்.இது தொடர்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றிடவேண்டுமெனவும்,சாலையை  சீர் செய்யவும், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்து வந்த நிலையில் இன்று வால்பாறை காமராஜ் நகர முதல் புது பஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள், கட்டிடங்கள் முதலியவற்றை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதில் நெடுஞ்சாலை துறை பொறியாளர், அதிகாரிகள், காவல் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டது.

 

Tags :

Share via