புளியம்பட்டி நகராட்சியில் நாய் கடித்து 7 பேர் காயம்

by Staff / 06-11-2023 02:50:23pm
புளியம்பட்டி நகராட்சியில் நாய் கடித்து 7 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய்புளியம்பட்டி நகராட்சி டானாபுதுாரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 35; நேற்று காலை வீட் டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த வெறி நாய் அவரை கடித்தது. அவர் சத்தமிடவே அப்பகுதியினர் நாயை விரட்டினர். அங்கிருந்து சென்ற வெறிநாய் மாதம்பாளையம் சாலையில், ஒரு வீட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்த சுப்புலட்சுமி, 65, என்ற மூதாட்டியை கடித்து குதறியது. இதை தொடர்ந்து பலரைகடித்துள்ளது. வெறிநாய் கடியால் காயம்பட்ட அனைவரும் புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சை பெற்றனர். இதில் சுப்புலட்சுமி, தொடர் மருத்துவ சிகிச்சைக்காக, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏழு பேரை நாய் கடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. வெறிநாய் சிக்காததால், நகராட்சி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via