கேரளா குண்டுவெடிப்பு - பலி 4ஆக உயர்வு

by Staff / 06-11-2023 04:17:08pm
கேரளா குண்டுவெடிப்பு - பலி 4ஆக உயர்வு

கேரளாவில் மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கலாமாச்சேரியில் கடந்த அக்டோபர் 29ம் தேதி, ஜெஹோவாஸ் விட்னெஸ் என மதக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், வெடிகுண்டு வைத்ததாக வீடியோ வெளியிட்டு, போலீஸில் சரணடைந்த டோமினிக் மார்டின் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via