கணவனை கொன்று உடலை எரிக்க முயன்ற மனைவி
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரின் பழைய சுபாஷ் காலனியில் பெண் தனது கணவரை கொன்று அவரது உடலை வீட்டிற்குள் எரிக்க முயன்றார். குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுக்குள்ளேயே இருந்து பூட்டிக்கொண்டு, போலீஸ் உள்ளே நுழைவதைத் தடுக்க கதவில் மின்சார இணைப்பு கொடுத்துள்ளார். இறந்தவர் போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுடன் தொடர்புடைய அமர்நாத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மீரா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலைக் கைப்பற்றினர். மீரா மனநிலை சரியில்லாதவர் என்றும், தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர்.
Tags :