போலி பஸ்பாஸ் தயாரித்தவர் கைது

by Staff / 11-03-2023 03:51:52pm
போலி பஸ்பாஸ் தயாரித்தவர் கைது


 மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை 52 இவர் திருமங்கலம் அருகே உள்ள அப்பக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் லேப் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.பாண்டித்துரை திருநகரில் இருந்து அப்பக்கரைக்கு டவுன் பஸ்சில் சென்று வருவது வழக்கம் அவர் பஸ் செலவை குறைப்பதற்காக கம்பம் போக்குவரத்து பணி பணியில் நடத்துனராக உள்ளதாக போலி பஸ் பாஸ் தயாரித்ததாக கூறப்படுகிறது.இந்த போலி பஸ் பாஸ் மூலம் தினமும் பஸ்ஸில் சென்று வந்துள்ளார்.நேற்று முன்தினம் திருமங்கலிருந்து அப்ப கரைக்கு வழக்கம் போல் பாண்டித்துரை டவுன் பஸ்சில் சென்றார். பஸ்ஸில் ஏறிய மதுரை போக்குவரத்துக் கழக பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை செய்து பாண்டித்துரையிடமும் பஸ் பாஸ் காண்பித்துள்ளார் ஆனால் அது போலியானது என்பதை அறிந்த ராமகிருஷ்ணன் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டித்துரையை கைது செய்தனர்.

 

Tags :

Share via