மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்..
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகேஷ் ராஜு - கிருத்திகா என்ற தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியார் ஆண்டாள், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது, கழிவறை கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியுள்ளார். மேலும் கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், ஆண்டாள் மற்றும் அவரது கணவர் கலிவரதனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :