நேருக்கு நேர் மோதிக்கொண்ட பைக்; 2பேர் பலி
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நேருக்கு நேர் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் எதிரே வந்த பைக் மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags :