அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவில் உண்டியல் திறப்பு...*
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவில் மாதாந்திர உண்டியல் திறப்பு இன்று திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் திருக்கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்துக்கொண்ட நிலையில், திறக்கப்பட்ட உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து ரூபாய் 56 இலட்சத்து 10 ஆயிரத்து 139. மற்றும் 101 கிராம் தங்கம், 390 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்களிடம் இருந்து உண்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற காணிக்கைகளை திருக்கோவில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டது.
Tags :