லாரி கவிழ்ந்து ஒருவர் பலி.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருமொழி சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை மாலை மீன்கள் ஏற்றிக் கொண்டு கேரளத்துக்குச் சென்ற சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது .இதில், பயணித்த லாரியின் உதவியாளா் ஜெகதாபட்டினத்தைச் சோ்ந்த மாரிமுத்து (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் காயமடைந்த ஓட்டுநா் ஜெயபிரகாஷ் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :