தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது - பண்ருட்டி ராமச்சந்திரன்

by Staff / 18-03-2023 01:39:19pm
தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது - பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அ. தி. மு. க. என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ. தி. மு. க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via