நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.

by Editor / 20-03-2023 09:29:31am
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து ஐஸ்வர்யா தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடு போய் உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த  60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள்,வைர நகைகள் காணாமல் போனதாகவும், இதுதொடர்பாக தனது வீட்டின் பணியாளர்கள் மூன்று பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா

Share via