குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பாங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும். 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
Tags :