ஏ. டி. எம். கொள்ளையில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

by Staff / 21-03-2023 02:52:53pm
ஏ. டி. எம். கொள்ளையில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

திருவண்ணாமலை நகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ. டி. எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ. டி. எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ. 72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.இதுதொடர்பாக அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35 வயது), ஆசாத் (36), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குதரத்பாஷா (43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர்உசேன் (26), நிஜாமுதீன் (37) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் போளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு எம். காளிமுத்துவேல், அவர்களை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 

Tags :

Share via